டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து - சின்னம்மா வரவேற்பு

LOGESH 8 months ago

தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக டெல்டா விவசாயிகளின் நலளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோர இருப்பதாக செய்திகள் வந்தவுடனே. இத்திட்டத்தை கைவிடவேண்டி கடந்த 04-04-2023 அன்று எனது அறிக்கையின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். எங்களது கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு தமிழக விவசாயிகளின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் மகிழச்சியை அளிக்கின்ற செய்தியாகும்.


கழக நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்