ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக 12 ஆம் ஆண்டு அலங்கார திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது : ஈரோடு ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

ஆறுமுகம் 9 months ago



ஈரோடு: ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பாக 12 ஆம் ஆண்டு அலங்கார திருவிளக்கு வீதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குருசாமி கடுக்கன் வெற்றிவேல், சுந்தரம், முருகன், தமிழ் ஆகியோர் தலைமையில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
திருவிளக்கு வீதி உலா ஈரோடு வ உ சி பூங்காவில் தொடங்கி வழியாக கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் வந்தடைந்தது இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
முடிவில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்