ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Subramanian 3 weeks ago

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவுபெறுகிறது.தையொட்டி இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.. வேட்புமனு வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்